சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடைக்கு சென்ற, திமுகவை சேர்ந்த யுவராஜ் உள்ளிட்டோர், பிரியாணி கேட்டு கடை ஊழியர்களை தாக்கினர். இது தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில், 6 பேரை போலீசார் கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே, கடை மீது தாக்குதல் நடத்திய நபர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ள ஸ்டாலின், கடைக்கு சென்று, தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.