இன்று இரவு இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் நிகழ உள்ள நிலையில், அதை வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று (ஜூலை 27) இரவு 11.54 மணிக்கு தொடங்கும் சந்திரகிரகணம், நாளை அதிகாலை 1 மணிக்கு முழு சந்திரகிரகணமாக மாறி, 2.43 மணி வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பகுதி சந்திரகிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடிவடையும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த முறை தோன்றிய கிரகணத்தை விட இது பெரிய அளவிலான சந்திரகிரகணம் என்றும், முழு சந்திரகிரகணம் ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் தோன்றும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும், அவ்வாறு பார்ப்பதால், பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திரகிரகணமானது ஐரோப்பிய, ஆப்பிரிக்கா, ஆசியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும் என்று கூறும் வானிலை ஆய்வாளர்கள், இதுபோன்ற முழு சந்திரகிரகணம் அடுத்ததாக 2029, ஜூலை 25ஆம் தேதி தான் நிகழும் என்றும் தெரிவித்துள்ளனர்.