எம்ஜிஆர்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்று வரும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி 9 வது கட்டமாக இன்று புழல் சிறையில் இருந்து 10 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை புழல் சிறையில் இருந்து மட்டும் 223 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், வேலூர் சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்