எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்பாணம் சிறையில் ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் 16 பேர் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 13–ந்தேதி இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து விடுதலையான 16 மீனவர்களும் இன்று (புதன்கிழமை) ராமேசுவரத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.