நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக இரண்டு விசைபடகையும் அதிலிருந்த 7 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த செய்புல்லா என்பவருக்கு சாந்தமான விசைப்படகில் (Tn 07 MD 235) சென்ற நாராயணன், சக்திதான், ஆயுள்பதி, கண்ணதாசன்ஆகிய நான்கு மீனவர்கள் மற்றும் அப்துல்வகாப் என்பவருக்கு சொந்தமான விசைபடகிள்(Tn 07 MD 1432) சென்ற மூவர் உட்பட மல்லிபட்டிணத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது