கொய்யா மர இலைகளை தூள் செய்து தூவுவதால் அரிசியில் கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.
கம்பு விதைகளை பூச்சிகளிலிருந்து பாதுகாக்க நொச்சி இலையுடன் கலந்து வைக்கலாம்.
உணவுதானியங்களை சேமித்துவைக்கும் முன் எலுமிச்சை சாறுடன் கலந்து பின் காய வைத்து சேமிக்கும் போது அவை பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் பெற்றவையாக இருக்கும்.
ஆமணக்கு விதைகளை தூள் செய்து துவரம்பருப்புடன் கலந்து வைத்து அதனை பூச்சிகளிலிருந்து பாதுகாக்கலாம்.
சாம்பல், சாணம் மற்றும் கரி போன்றவை தானிய வகைகளை வண்டுகள் மற்றும் கூன் வண்டுகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
தட்டைப் பயறை மண்பானைகளில் சேமிக்கும் போது 1 அடுக்கு (2.5 செ.மீ.) தட்டைப்பயறும் 1 அடுக்கு சாம்பலும் (1 செ.மீ.) கலந்து வைப்பதால் பயறு வண்டுகள் சேதத்தை பெருமளவு குறைக்கலாம்.
தானிய வகைகளை சேமிக்கும் முன்பு அந்த இடத்தில் வைக்கோல், மிளகாய், மரத்தூள் மற்றும் மண்ணெண்ணை கொண்டு புகை மூட்டம் ஏற்படுத்தி பின்பு சேமிக்க அடுக்கி வைத்தால் சேமிக்கும் போது வரும் பூச்சிகளுக்கு முன் காப்பாக இருக்கும்.
சாம்பல், எலுமிச்சை, மிளகாய்த்தூள் ஆகியவை சேமிப்பு தானிய பூச்சிகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்துகின்றன.