நீட் தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
நீட் தேர்வில், தமிழ் விடைத்தாளில் குளறுபடி இருப்பதால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மார்க்சிஸ்ட் எம்.பி.,ரங்கராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை ஏற்ற மதுரை ஐகோர்ட் கிளை, தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 தவறான கேள்விகளுக்கு 196 மதிப்பெண் கருணை அடிப்படையில் வழங்க கடந்த மாதம் உத்தரவிட்டது.