தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 6 துறைகளுக்கான நலத்திட்டங்களை தலைமை செயலகத்தில் இன்று துவக்கி வைத்தார்.நிதித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பால்வளத் துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, இளைஞர் நலம் மற்றும் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட 6 துறைகளுக்கான நலத்திட்டங்களை இன்று துவக்கி வைத்தனர்.
மேலும், ஆவின் நிறுவனத்துக்கு அதிக தூரம் பால் பொருட்களை கொண்டு செல்லும் கனரக லாரிகள், ஊராட்சி மற்றும் சுகாதார துறைக்கு பொலிரோ வகை ஜீப்கள், கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் ரயில்வே மேம்பாலம், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் மக்களின் பயனுக்கு என்ற வகையில் உள்ள திட்டங்களை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி.