Forums › Communities › Farmers › நிலத்தை வளத்தோடு வைத்திருக்க எளிய வழிமுறைகள்
Tagged: இயற்கை விவசாயம், இன்மதி, நிலம், மண், விவசாயம்
- This topic has 1 reply, 2 voices, and was last updated 2 years, 6 months ago by
Kannan Kannan.
-
AuthorPosts
-
July 6, 2018 at 2:54 pm #6445
நாச்சியாள் சுகந்தி
Participantநிலம் வளமோடு இருந்தால் தான் அதில் பயிரிடப்படும் பயிர்களும் சத்தாக இருக்கும். ஆனால் நிலத்தின் வளத்தைக் குன்றாமல் பார்த்துக்கொள்வதுதான் ஒவ்வொரு விவசாயிக்கும் முன்னால் இருக்கும் சவால்.
நிலத்தை இயற்கை முறையில் வளப்படுத்த சில எளிய வழிமுறைகள்
பல தானிய விதைப்பு: ஒரு ஏக்கருக்கு 5 கிலோ மஞ்சள் சோளம், 1 கிலோ கம்பு, 1 கிலோ சிகப்பு சோளம், 200 கிராம் நரி பயிறு , 200 கிராம் கொள்ளு, 200 கிராம் மொச்சை, 100 கிராம் கடுகு, 100 கிராம் வெந்தயம், 100 கிராம் சீரகம் , 100 கிராம் ஆமணக்கு விதை, 200 கிராம் எள், 200 கிராம் உளுந்து, 200 கிராம் தட்டைபயிறு 200 கிராம் பாசி பயிரு, 1 kg தக்கை பூண்டு, 1 kg சணப்பை கலந்து தெளிக்க வேண்டும். (மேற்கண்ட பொருட்களில் தங்களிடம் உள்ளதை அதிகபடுத்தி கொள்ளலாம் கடையில் வாங்கும் பொருட்களை குறைத்தும் கொள்ளலாம்.இதில் சோளம் மிகவும் அவசியமானது) இந்த முறையால் ஒரு ஏக்கருக்கு 7 – 9 டன் மக்கு கிடைக்கும்
எருவு போடுதல்: தங்களிடம் உள்ள ஆடு, மாடு, கோழி எருக்களை ஒன்றாக ஒரே எருவு குழியில் கொட்டி மக்க செய்து ஒரு ஏக்கருக்கு 2 டிராக்டர் லோடு போதுமானது. முடிந்தால் குப்பை குழியில் வேப்ப தழை, எருக்கு, நொச்சி போன்றவையும் சேர்த்து மக்கச் செய்யலாம் ..இந்த முறையால் ஏக்கருக்கு 5 – 7 டன் மக்கு கிடைக்கும். அல்லது தங்கள் பகுதியில் கிடை கிடைத்தாலும் அடித்து கொள்ளலாம்.
பயிர் அறுவடை முடிந்த பின்னர் அதன் மீதி பாகங்களை வயலில் பரப்பி உழவு செய்தல் (உதாரணமாக… வெங்காயம் ஆய்ந்த பிறகு அதன் தோகைகளை வயலில் பரப்பி விடுதல்)
மேற்கண்ட முறையை நாம் கோடை கால மழைகளை பயன்படுத்தி விதைப்பு செய்து மக்க செய்ய வேண்டும். மழை வரட்டும் அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று இருந்தால் அது பயன் தராது. (நெல் தவிர) எருவு இவ்வளவு தர இயலாது என்று நினைப்பவர்கள் பயிர் செய்த பின்பு ஒரு ஏக்கருக்கு சுமார் 250 கிலோ அளவு எடுத்து சூடோமோனல், விரிடி , அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா தலா 1 kg எடுத்து கலந்து ஒரு வாரம் நிழலில் நிழலில் வைத்து ஈரப்பதமான சூழலில் வயலில் தெளிக்கலாம்.
நாட்டு மாடு எருவாக இருந்தல் 1 லிட்டர் பஞ்ச கவ்யா 5 லிட்டர் ஜீவாமிர்தம், 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து வைத்தும் பயன் பெறலாம். (சூடோமோனஸ், விரிடி …… எதுவும் வேண்டாம் )சத்து பராமரிப்பு:
எந்த பயிராக இருந்தாலும் விதை நேர்த்தி அவசியம்
ஒவ்வொரு முறை நீர் பாய்ச்சும் போதும் ஏதாவது ஒரு இடுபொருள் உதாரணமாக.. ஜீவாமிர்தம், பஞ்ச காவ்யா, மீன் அமிலம்
10 நாட்களுக்கு ஒரு முறை இலை வழி தெளிப்பு
எந்த பயிராக இருந்தாலும் அதன் வாழ்நாளிலில் பாதிக்கு மேல் மீன் அமிலம் தெளிக்க கூடாது (ஏன் என்றால் இது வளர்ச்சியை மிகுதி படுத்தும்). Ex: வெங்காயமாக இருப்பின் 35 நாட்களில் இரண்டு முறை மட்டும் போதுமானது அதாவது 15ம் , 30ம் நாள் மட்டும்.
எந்த பயிராக இருந்தாலும் வேப்ப புண்ணாக்கு அவசியம்(வெங்காயம், நிலகடலைக்கு ஏக்கருக்கு 100 kg ).July 6, 2018 at 5:03 pm #6459Kannan Kannan
Participantநிலம் வளமோடு இருந்தால் தான் அதில் பயிரிடப்படும் பயிர்களும் சத்தாக இருக்கும். ஆனால் நிலத்தின் வளத்தைக் குன்றாமல் பார்த்துக்கொள்வதுதான் ஒவ்வொரு விவசாயிக்கும் முன்னால் இருக்கும் சவால். நிலத்தை இயற்கை முறையில் வளப்படுத்த சில எளிய வழிமுறைகள் பல தானிய விதைப்பு: ஒரு ஏக்கருக்கு 5 கிலோ மஞ்சள் சோளம், 1 கிலோ கம்பு, 1 கிலோ சிகப்பு சோளம், 200 கிராம் நரி பயிறு , 200 கிராம் கொள்ளு, 200 கிராம் மொச்சை, 100 கிராம் கடுகு, 100 கிராம் வெந்தயம், 100 கிராம் சீரகம் , 100 கிராம் ஆமணக்கு விதை, 200 கிராம் எள், 200 கிராம் உளுந்து, 200 கிராம் தட்டைபயிறு 200 கிராம் பாசி பயிரு, 1 kg தக்கை பூண்டு, 1 kg சணப்பை கலந்து தெளிக்க வேண்டும். (மேற்கண்ட பொருட்களில் தங்களிடம் உள்ளதை அதிகபடுத்தி கொள்ளலாம் கடையில் வாங்கும் பொருட்களை குறைத்தும் கொள்ளலாம்.இதில் சோளம் மிகவும் அவசியமானது) இந்த முறையால் ஒரு ஏக்கருக்கு 7 – 9 டன் மக்கு கிடைக்கும் எருவு போடுதல்: தங்களிடம் உள்ள ஆடு, மாடு, கோழி எருக்களை ஒன்றாக ஒரே எருவு குழியில் கொட்டி மக்க செய்து ஒரு ஏக்கருக்கு 2 டிராக்டர் லோடு போதுமானது. முடிந்தால் குப்பை குழியில் வேப்ப தழை, எருக்கு, நொச்சி போன்றவையும் சேர்த்து மக்கச் செய்யலாம் ..இந்த முறையால் ஏக்கருக்கு 5 – 7 டன் மக்கு கிடைக்கும். அல்லது தங்கள் பகுதியில் கிடை கிடைத்தாலும் அடித்து கொள்ளலாம். பயிர் அறுவடை முடிந்த பின்னர் அதன் மீதி பாகங்களை வயலில் பரப்பி உழவு செய்தல் (உதாரணமாக… வெங்காயம் ஆய்ந்த பிறகு அதன் தோகைகளை வயலில் பரப்பி விடுதல்) மேற்கண்ட முறையை நாம் கோடை கால மழைகளை பயன்படுத்தி விதைப்பு செய்து மக்க செய்ய வேண்டும். மழை வரட்டும் அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று இருந்தால் அது பயன் தராது. (நெல் தவிர) எருவு இவ்வளவு தர இயலாது என்று நினைப்பவர்கள் பயிர் செய்த பின்பு ஒரு ஏக்கருக்கு சுமார் 250 கிலோ அளவு எடுத்து சூடோமோனல், விரிடி , அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா தலா 1 kg எடுத்து கலந்து ஒரு வாரம் நிழலில் நிழலில் வைத்து ஈரப்பதமான சூழலில் வயலில் தெளிக்கலாம். நாட்டு மாடு எருவாக இருந்தல் 1 லிட்டர் பஞ்ச கவ்யா 5 லிட்டர் ஜீவாமிர்தம், 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து வைத்தும் பயன் பெறலாம். (சூடோமோனஸ், விரிடி …… எதுவும் வேண்டாம் ) சத்து பராமரிப்பு: எந்த பயிராக இருந்தாலும் விதை நேர்த்தி அவசியம் ஒவ்வொரு முறை நீர் பாய்ச்சும் போதும் ஏதாவது ஒரு இடுபொருள் உதாரணமாக.. ஜீவாமிர்தம், பஞ்ச காவ்யா, மீன் அமிலம் 10 நாட்களுக்கு ஒரு முறை இலை வழி தெளிப்பு எந்த பயிராக இருந்தாலும் அதன் வாழ்நாளிலில் பாதிக்கு மேல் மீன் அமிலம் தெளிக்க கூடாது (ஏன் என்றால் இது வளர்ச்சியை மிகுதி படுத்தும்). Ex: வெங்காயமாக இருப்பின் 35 நாட்களில் இரண்டு முறை மட்டும் போதுமானது அதாவது 15ம் , 30ம் நாள் மட்டும். எந்த பயிராக இருந்தாலும் வேப்ப புண்ணாக்கு அவசியம்(வெங்காயம், நிலகடலைக்கு ஏக்கருக்கு 100 kg ).
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.