3 மாதங்களுக்கு பொருட்களை வாங்கவில்லை என்றாலும் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படாது – அமைச்சர் காமராஜ்.
3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என மத்தியரசின் தகவலை தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் மா.சுப்பிரமணியம், இதனால் பல ஊர்களுக்கு சென்று தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ் 3 மாதங்களாக பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டுகள் ரத்து என்ற அறிவிப்பை தமிழகம் பின்பற்றாது என்றார்.