தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இயங்கி வருகின்றன. இதில் பல படகுகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையே விசைப்படகு மீனவர்கள் தங்கு கடலுக்கு அனுமதி கேட்டது தொடர்பான நீதிமன்ற வழக்கு நிலுவை காரணமாகவும், வேலை நிறுத்தம், மீன்பிடி தடைகாலம் உள்ளிட்டவை காரணமாகவும் கடந்த 10 மாதங்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனையடுத்து கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதியளித்தது.
இந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகுகளை ஆய்வு செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தனர். இதனால் நேற்று விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகுகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு இன்றும் தொடர்ந்து நடைபெறும் என மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாக மீனவர் சங்க பிரதிநிதி சைரஸ் கூறுகிறார்