பாம்பன் பாலத்திலிருந்து வாலிபர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த 26 வயதான ரவிச்சந்திரன் மகன் ராகுல். இவர் நேற்று மாலை திடீரென பாம்பன் பாலத்திலிருந்து குதித்துள்ளார். இதனைக் கவனித்த நாட்டுப்படகு மீனவர்கள் உடனடியாக ராகுலை மீட்டு பாம்பன் போலீஸில் ஒப்படைத்துள்ளனர். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.