இலங்கை திரிகோணமலை நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகத்மோகன், அவரது மனைவி சாந்தினி மற்றும் குழந்தைகள் சஜிர்தனா, ஸ்ரீவித் ஆகியோர், மதுரை அகதிகள் முகாமில் வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் தாயகம் செல்ல முடிவு செய்து இடைத்தரகர்கள் மூலம் வேளாங்கண்ணி அருகே உள்ள செருதூர் கடற்பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கை செல்வதற்காக படகிற்கு காத்திருந்தனர். அப்போது, அவர்கள் மீது சந்தேகம் கொண்ட கியூ பிராஞ்சு போலீஸார், விசாரணை நடத்தியதில் அவர்கள் கள்ள படகிற்காக காத்திருந்ததை தெரிவித்ததாக கூறுகின்றனர்
இதனைத் தொடர்ந்து கீழையூர் கடலோர பாதுகாப்பு படை போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். உரிய பாஸ்போர்ட் இல்லாமல் கடல் மார்க்கமாக தப்பி செல்ல முயன்றதால் பாஸ்போர்ட் சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இவர்கள் இலங்கைக்கு செல்ல இடைத்தரகர்கள் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.