முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரான திருப்பூர் தொழிலதிபரை கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூரில் கார்மெண்ட்ஸ் தொழில் நடத்தி வந்த சிவமூர்த்தி, கடந்த 25-ம் தேதி முதல் காணவில்லை என்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆம்பூர் அருகே வெங்கிளி என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சொகுசு காருடன் 3 பேர் நின்று கொண்டு இருந்தனர்.
3 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த விமல், கவுதமன், மணிபாரதி என்பதும், தனது நிறுவனத்தில் பணியாற்றிய பெண்ணுடன் சிவமூர்த்திக்கு தொடர்பு இருந்ததால், அந்தப் பெண்ணின் கணவரும், நண்பர்களும் சேர்ந்து அவரைக் கடத்தி கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Source : Puthiyathalaimurai TV