ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்க அனுமதி இதுவரை வழங்கப்படாததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கடல் கொந்தளிப்பும் இருந்து வந்தது. இதனால் மீன் பிடிக்க செல்ல மீனவர்களுக்கு மீன் வளத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காமல் இருந்தனர்.
இதையடுத்து, 1000 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் இருந்தன. தற்போது, காற்றின் வேகமும், கடலின் கொந்தளிப்பும் சற்று தணீந்த நிலையில், மீனவர்களுக்கு இதுவரை மீன் பிடிக்க செல்ல நுமதி வழங்காததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக மீனவர் சங்க தலைவர் பிரடரிக் கூறுகிறார்.