தஞ்சை மாவட்ட கடல்பகுதியில் சூறாவளிக்காற்றால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
நேற்று முன்தினம் முதல் தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசிவருகிறது. இதனால் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்ல வேண்டிய 240 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 81 விசைப்படகுகளில் 40 படகுகள் மட்டுமே கடலுக்கு சென்றன.