கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் அங்கு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து நேற்று 1000 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது. இன்று 35,000 கன அடிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் சிறிதளவு பயனடைவர்.