தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை, சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம்தேதி தகௌதி நீக்கம் செய்ததாக அறிவித்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு, இன்று மதியம் 1.30மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியல் சூழல் பரபரப்படைந்துள்ளது.