தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் பிரசவம் நடைபெறுகிறது : அமைச்சர் விஜயபாஸ்கர்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெற்றுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் 70 சதவிகிதம் பிரசவம் நடப்பதாகவும், தாயும் சேயும் இருப்பதற்கான தனி அறைகள் விரைவில் உருவாக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் அவர் கூறியுள்ளார்.