- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 7 months ago by
Inmathi Editor.
-
AuthorPosts
-
June 5, 2018 at 2:25 pm #3388
முகநூலிலிருந்து
Stanley Rajan
19 mins ·
காலா படத்துக்கு எங்குமே வரவேற்பில்லை, அவரின் தீவிர ரசிகர்கள் கூட தேவதாஸ் கோலத்தில் ரஜினியினை காண விரும்பவில்ல்லை
ரஜினியினை அவரின் ரசிகன் இந்த பரதேசி கோலத்தில் காண விரும்பமாட்டான், அவன் மனநிலை அப்படி
ஏன் டிக்கெட் மந்தம் என்றால் ரசிகனின் கருத்துபடி படம் எப்படி இருக்கும் என்றால் இப்படித்தான்
ரஜினிக்கு ஒரு மாதிரி பெயிண்ட் அடித்து , ஒரு மாதிரி ஆடை உடுத்தி போராளி போல உலாவ விட்டிருப்பார் ரஞ்சித், ரஜினி ஸ்டைலாக நடப்பார், ஸ்டைலாக சிரிப்பார்
தெருவில் நடப்பார், அங்கே சுருண்டு கிடக்கும் நாயினை மிதித்து “போ போய் போராடு” என்பார், மாடு கட்டபட்டிருந்தால் “மாட்டின் குணமே போராடுவது அதை கட்டிவைக்காதே” என வசனம் பேசி அவிழ்த்துவிடுவார்,
எவனாவது மும்பை கேட் பக்கம் புறாவுக்கு இரை போட்டால் “புறாவோட குணமே தேடி இரைபொறுக்குறது அத கெடுக்காதே” என சொல்லி அந்த திணையினை கடலுக்குள் வீசுவார்
அப்படியே சப்பாத்தி சாப்பிடுவார், ஒரு மராட்டியன் வந்து உனக்கு சப்பாத்தி ஒரு கேடா என்பான், உடனே ரஜினி பொங்கி நெல்லை தமிழில் பேசுவார்
எலேய்.. தமிழேன் எங்க போனாலும் கூழும் கஞ்சியியும்தான் குடிக்கணுமோல., அவன் சப்பாத்தி, பரோட்ட, வடபாவ் எல்லாம் சாப்ட கூடாதால….
நா சப்பாத்தி சாப்படுவேம்ல, நல்லா சால்னா வச்சி சாப்பிடுவேம்ல, உன் முன்னால உக்காந்து சாப்பிடுவேம்ல..
ருசியா, டேஸ்டா நக்கி நக்கி சாப்பிடுவேம்ல
உன்னால பொறுக்க முடியலண்ணா சாவுல சவத்து மூதி,
எந்த செறுக்கி பயவுள்ளையாவது சப்பாத்திய புடுங்க வந்தா தூக்கி போட்டு மிதிப்பேம்ல ”
கூடவே 4 பேர் நம்பர் சிஸ்டத்தில் அடிவாங்குவார்கள், ஆங்காங்கே அம்பேத்கர் படம் தென்படும், சே படம் இருக்கும் , ரஜினி சம்பந்தமே இல்லாமல் “யாருக்கு பொறந்தா என்னடா? சுகபிரசவமாதான் பொறந்தோம்” என வடிவேலுவிடம் சொல்லும் பைத்தியம் போல ஏதாவது சொல்லிகொண்டிருப்பார்
இந்த கருப்பு உடையினை ஏற்கனவே ” கொடி பறக்குது” படத்திலே பார்த்தாயிற்று, அன்றே சகிக்கவில்லை
கபாலியில் பல இமாலய தவறுகளை செய்திருந்தார் ரஞ்சித், அதாவது தோட்ட துண்டாடல் என்பது 1960ல் நடந்தது அது 1999ல் நடந்தது போல காட்டியிருந்தார்
இன்னொன்று அக்கால மலேய தமிழர்கள் வெள்ளை ஆடை அணிவார்கள் இல்லை கோட் சூட் அணிவார்கள், ரஜினி அணிந்தது போல ஒரு மாதிரி எல்லாம் அணியமாட்டார்கள்
இன்னும் ஏராள சொதப்பல்கள் உண்டு, அந்நேரம் ரஞ்சித் கையில் கிடைத்தால் மலேசியரில் பலர் அடித்திருக்கலாம் அன்னார் சிக்கவில்லை
இப்பொழுது பழைய பம்பாயின் கலாச்சாரத்தை சொல்கின்றேன் என சொதப்பி இருப்பார். பம்பாய்க்காரர்கள் போட்டு சாத்தபோகின்றார்கள்
படம் எவ்வளவு தாமதமாக வருகின்றதோ அவ்வளவுக்கு ரஞ்சித்துக்கும், ரஜினிக்கும் நல்லது
வராமலே போனால் இன்னும் நல்லது
Attachments:
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.