தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என இன்று சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது . மேலும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா எனவும் ஜூன் 9 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மற்றொரு மனு ஒன்றையும் விசாரித்த நீதிபதிகள், விசாரணை என்ற பெயரில் பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.