தூத்துக்குடியில், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடலை வாங்க மறுத்து அவர்களது உறவினர்களும், பொதுமக்களும் இன்று அரசு மருத்துவமனையின் முன் போராடிவருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற எழுத்துப்பூர்வமான உறுதிமொழி வேண்டும், மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராடிவருகின்றனர்.
அவர்களை தடியடி செய்து போலீஸார் கலைக்க முயற்சித்த போது மீண்டும் வன்முறை உருவானது. இதில் போலீஸ் வாகனம் ஒன்றிற்கு தீயிடப்பட்டது. இதனையடுத்து போலீஸார் அரசு மருத்துவமனை அருகில் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர் என அரசு மருத்துவமனையின் அருகில் நின்று சம்பவத்தை நேரில் பார்த்துவரும் காஸ்ட்ரோ கூறுகிறார்