தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு,வடமேற்கு திசையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவின் மேற்கு கரையோரங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படப்போவதில்லை எனினும் மணிக்கு 45முதல் 55 கிலோ.மீட்டர் வேகத்தில் கடல் காற்று வீசக் கூடும்.
ஆகவே, மத்திய மற்றும் தென் அரபிக்கடல் 21 ஆம் தியதி முதல் 23 ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மேற்கு மத்திய மற்றும் தென் மேற்கு அரபிக்கடலிலும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.