முறையான பதிவு பெறாத ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகளை கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க கூடாது என்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பிரிவின் நீதியரசர்கள் எம் .எம் சுந்தரேஷ் மற்றும் என் . சதீஷ் குமார் அமர்வு பதிவு செய்யப்படாத மீன்பிடி படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வந்தனர் .
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் முன் வர்த்தக கப்பல் சட்டம் 1958 ன் 435 பிரிவின் “ஜே ” “கே ” உட்பிரிவின்படி உரிய மாநில அரசின் பதிவு பெற்றிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு பதிவு செய்யப்படாத இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப்பில் அனுமதிக்க கூடாது என்று நீதியரசர்கள் நேற்று உத்தரவு பிறப்பித்தனர் .
இது தொடர்பாக உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது .