புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும், மாத இறுதிக்குள் சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும்,100க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி ஓட்டுநர், நடத்துனர், பணிமனை தொழிலாளர்கள் என 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.