சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திமுக உயர்மட்ட செயல்திட்ட ஆலோசனை குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் பாராளமன்ற தேர்தலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஒருவேளை பாராளமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் வந்தால் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது, எப்படி கையாள்வது என ஆலோசிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் நிலைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. என்ன தான் செயல்திட்ட குழுவில் ஆலோசித்தாலும் இது குறித்து விரைவில் தலைமை கழக நிர்வாகிகளுடன் பேசி, பின் பொதுக் குழுவில் முடிவு செய்து, தேர்தல் சமயத்தில் விரைவில் அறிவிப்போம். தேர்தல் தேதி அறிவித்த பிறகு யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.