Forums › Communities › Fishermen › பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தடை செய்ய புதுவை அரசுக்கு கோரிக்கை
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 4 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
அக்டோபர் 15, 2018 at 8:45 மணி #14362
Inmathi Staff
Moderatorபுதுச்சேரியில் மக்கள் உபயோகிக்கும் அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பை கூளங்களாக தெருக்களில் வீசி எறியப்பட்டு வாய்க்கால்கள் வழியாக கடலுக்கு சென்று கடல் வாழ் உயிரினங்களை அழித்து விடுவதாலும்,. கடல்வாழ் உயிரின உற்பத்தியை தடுத்து விடுவதாலும் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பிளாஸ்டிக் உபயோகங்களையும் தடை செய்ய வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை சார்பில் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில சுற்றுச்சூழல், துறைமுகம், விஞ்ஞான தொழில் நுட்பம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் திரு மு.கந்தசாமி அவர்களிடம் தேசிய மீனவர் பேரவை தலைவரும் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மா. இளங்கோ தலைமையில் மீனவ பிரதிநிதிகள் மனு அளித்தனர்.
ஒரு சில நாட்களில் வட கிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளது இப்பருவ காலத்தில் பெய்யக்கூடிய தொடர்மழை,, புயல், சூறைக்காற்று மற்றும் வெள்ளம், ஆகியவற்றால் புதுச்சேரியின் பல பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் அடைப்பு ஏற்பட்டு பெரும் பிரச்சனையாவது வழக்கம்.
முந்தைய ஆண்டுகளை விட ஒவ்வொரு ஆண்டும் கூடுதலான பிளாஸ்டிக் பொருட்கள் குறிப்பாக பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தால் சாக்கடைகள், வாய்க்கால்கள், பெரிய வெள்ள நீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் பல மணி நேரம் நீர் தேங்கி பொதுமக்களை நடமாடவிடாமல் செய்து விடுவது வாடிக்கையாக உள்ளது.
இத்தகைய பிளாஸ்டிக் கேரி பேக் கழிவுகள் பெரிய வெள்ள வாரியில் சென்று கடலையும் பாழ்படுத்தி கடல் வாழ் உயிரினங்களை பலிவாங்கி விடுகின்றன.
வெள்ளவாரி வாய்க்கால்கள் மூலம் கடலுக்கு செல்லும் வழியில் பிளாஸ்டிக் கழிவுகள் ஆற்றுமுகத்துவாரத்தை அடைத்து கொண்டு மீன்பிடி படகுகள் நகரமுடியாத சூழலை உருவாக்கி விடுகிறது.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் , திப்ராயபேட்டை கடற்கரை பகுதி குப்பை மேடு போல் காட்சியளிக்கிறது.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம், திப்ராயபேட்டை லைட் ஹவுஸ் அருகே உள்ள கடற்கரையில் மணல் அரிப்பினை தடுக்க கருங்கற்கள் காட்டப்பட்டுள்ளது. கடல் நீரோட்டம் மாறுதல் காரணமாக கடற்கரை மணல் குப்பை மேடு போல் தற்போது காட்சியளிக்கிறது. தினசரி ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கிய குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது.
இப்படி கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் கலக்கிறது. இதனால் கடற்கரை பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கவர்கள் நிறைந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. கடற்கரை அழகே பறிபோய்விடுகிறது. இப்படி கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் கலக்கிறது.
கடல் வாழ் உயிரினமான கடல் ஆமைகள் உணவிற்காக ஜெல்லி மீன் வகைகளை சாப்பிடுகிறது. இந்த மீன்கள் வெள்ளை நிறத்துடன் மிருதுவாக இருக்கும். கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பைகள் ஜெல்லி மீன்கள் போன்று இருப்பதால் கடல் ஆமைகள் மிதக்கும் பிளாஸ்டிக் பைகளை அதிக அளவில் சாப்பிடுகிறது. இதனால் கடல் ஆமைகள் இறக்க நேரிடுகிறது.
குடியிருப்பு பகுதியில் குவியும் குப்பை அனைத்தும் வம்பாகீரப்பாளையம், திப்ராயபேட்டை கடற்கரை ஓரத்தில் கொட்டப்படுகிறது. சாக்கடை கழிவுகளும் கடலில் கலக்கிறது. இந்த கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் எழில் மிகு கடற்கரை மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. வம்பாகீரப்பாளையம், திப்ராயபேட்டை கடற்கரை பகுதி குப்பை கிடங்காக மாறுவதை தடுக்க, ஆய்வு நடத்த வேண்டும். பிளாஸ்டிக் உள்பட கழிவு பொருட்கள் கடலில் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
AuthorPosts
- கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.