இலங்கை கடற்படையால் எல்லை தாண்டிவந்ததாக கடந்த 2015ம் ஆண்டு தமிழக மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 184 விசைப்படகுகளை பறிமுதல் செய்து அந்நாட்டில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் நிறுத்திவைத்துள்ளனர்.
இதில் முதல் கட்டமாக 42 விசைப்படகுகளை விடுதலை செய்து, அதனை தொடர்ந்து எஞ்சிய படகுகள் அனைத்தையும் விடுதலை செய்தது இலங்கை அரசு.
இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட படகுகளை மீட்டு கொண்டு வருவதற்கு படகுகளின் நிலைமை குறித்து ஆய்வு செய்ய 5மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் 10மீனவர்கள் கொண்ட குழு இன்று 1மணிக்கு மதுரையில் இருந்து இலங்கை செல்கின்றது.
இந்த குழு யாழ்ப்பாணம், தலைமன்னார், புத்தளம், வவுனியா, காரைநகர், ஊர்காவல்துறை போன்ற துறைமுகங்களுக்கு சென்று வரும் 16ம் தேதி இலங்கையில் இருந்து இந்தியா புறப்படுகின்றனர்.