கடல் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சவுதி கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் போது கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் காயமடைந்த குமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆரோக்கியராஜ், விஜய், விவேக் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.