மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்துக்கு தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை மரியாதை செலுத்தினர்.