ராமேசுவரம் அருகே புயலால் அழிந்துபோன தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்தது.
அரிச்சல்முனை பகுதியில் மணல் பரப்பாக காணப்பட்ட பகுதி முழுவதும் கடல் நீர் புகுந்து சூழ்ந்தது.கம்பிப்பாடு பகுதியில் உள்ள புயலால் அழிந்துபோன கட்டிடங்கள் உள்ள கடற்கரை பகுதியை தாண்டியும் கடல் நீர் உள்ளே புகுந்தது.