முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மனு மீது விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.தொடர்ந்து, விவாதங்களைக் கேட்ட நீதிபதி, டெண்டர் அழைப்பு விடுத்தது எப்போது? ஒப்புதலுக்கான 3 கமிட்டிகள் அமைத்தது யார்?, கமிட்டியில் அளிக்கப்பட்ட ஆவண விவரங்கள் என்னென்ன? உள்ளிட்டவற்றை வரும் திங்களன்று தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.