பாம்பனை அடுத்த தெற்குவாடி துறைமுக கடற்கரையில் இருந்து சுமார் 80–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் நேற்று கிளாத்தி, திருக்கை, டியூப் கணவாய், களவாய், சிங்கி, காரல், பாறை உள்ளிட்ட பல வகை மீன்களுடன் கரை திரும்பினர். அனைத்து படகுகளிலும் மிகவும் குறைந்த அளவிலே மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் ஒவ்வொரு படகிற்கும் ரூ.10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலும் நஷ்டம் ஏற்பட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.