வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள், பெட்ரோல் குண்டு வீசியும், கம்பால் தாக்கியும், வலைகளை அறுத்து சேதப்படுத்தியும் விரட்டி அடித்தனர். இலங்கை மீனவர்களின் இச்செயல்கள் குறித்து நாகை மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திடமும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர்.