தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், அத்துமீறி தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்ததாக ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த பூமி, பால்குமார், சதீஸ், துரைமுருகன், அலெக்ஸ்பாண்டியண் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மில்டன் ஆகிய 6 பேர் துபையில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த ஈரானிய கடற்படையினர் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி மீனவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.