சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே அனுப்பூரில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவை 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற மக்களுக்கு கிடைக்கும் வசதிகள் அனைத்தும் ஊரகப் பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார். விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் அரசு துணை நிற்கும் என்றும், வேளாண்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும் அவர் கூறினார்.