தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிற மாநிலங்களை விட பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு கல்வியில் , வேலை வாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது. இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த 2 மாணவியர் சஞ்சனா, அகிலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இடைக்கால தடையும் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். இது தொடர்பான மூல வழக்கு நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.