முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதை தொடர்ந்து, கேரள அரசு அச்சம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக கேரள முதல்வர் விஜயன், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில், முல்லை பெரியாறு அணையை உச்சநீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு குழு ஆய்வு செய்தது. அதில், அணை பாதுகாப்பாக உள்ளதாக கூறியுள்ளது.இதனால், அணை பாதுகாப்பில் எந்த அச்சுறுத்தலும் இல்லை. உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி அங்கு 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. பெரியாறு அணையிலிருந்து, வைகை நதிக்கு அதிகபட்ச தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. . 142 அடி நீர்மட்டத்தை தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, இரு மாநிலங்கள் ஒப்பு கொண்டபடி அங்கிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணை வலுவாக உளளதால், நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவை கண்காணிக்க தமிழக அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.