கடந்த ஆறாம் தேதியன்று தேச சக்தி என்ற மத்திய கப்பல் கழகத்திற்கு சொந்தமான கப்பல், ஓசியானி என்ற படகுடன் கொச்சி கடல் அருகே மோதியதில் குமரி மீனவர்கள் 3 பேர் பலியானதுடன் மீதமுள்ள 11 மீனவர்களை காணவில்லை.
இதனிடையே, மீனவர்களின் நீண்ட தேடுதலுக்கு பின் கேரள மீனவரின் உடல் 5 நாட்களுக்கு பின் இழுவலையில் கிடைத்துள்ளது.
இதுவரை மீதமுள்ள மீனவர்களைக் குறித்த எந்த தகவலும் கிடைக்காத நிலையில், 14 பேர் சென்ற விசைப்படகை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாயமான இந்திய அரசின் தேஷ் சக்தி கப்பலை பறிமுதல் செய்து மாலுமி மீது வழக்குப்பதிவு செய்து குற்றநடவடிக்கை எடுக்கவும், மாயமான மீனவர்களை உயிரோடு மீட்கவும் உயிரிழந்த மீனவர்களுக்கு தலா ஒருகோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி மீனவர்களின் குடும்பத்தினரும் ராமன்துறை ஊர்மக்களும் இணைந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.