நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கோவை குற்றாலத்தில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.